செய்திகள்

மும்பை: புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து - 5 பேர் பலி

Published On 2017-09-06 22:17 GMT   |   Update On 2017-09-06 22:17 GMT
மராட்டிய மாநிலம் மும்பையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் ஜுஹு பகுதியில் உள்ள கிசோர் குமார் கார்டன் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு, அங்கு வெல்டிங் பணிக்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது.

இதில் கட்டிடத்தில் தீ பரவியது. இந்த கோர விபத்தில் கட்டுமானப்பணியிலிருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News