செய்திகள்
ஜார்கண்ட்: தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுனமாக கருதி கொன்ற தாய்
ஜார்கண்ட் மாநிலத்தில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுனம் என கருதி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுனம் என கருதி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய ஏழுமாத இரட்டை ஆண் குழந்தையை அபசகுனமாக கருதி தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி கொன்றுள்ளார். பின்னர், தனது வீட்டில் சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்த அப்பெண் தலைமுடி கத்தரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே தனது தலைமுடியை வெட்டி நாடகமாடியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கிணற்றிலிருந்து குழந்தைகளின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தைகளை அபசகுனமாக கருதி தாயே கிணற்றில் வீசி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுனம் என கருதி பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய ஏழுமாத இரட்டை ஆண் குழந்தையை அபசகுனமாக கருதி தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி கொன்றுள்ளார். பின்னர், தனது வீட்டில் சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்த அப்பெண் தலைமுடி கத்தரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே தனது தலைமுடியை வெட்டி நாடகமாடியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கிணற்றிலிருந்து குழந்தைகளின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தைகளை அபசகுனமாக கருதி தாயே கிணற்றில் வீசி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.