search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை குழந்தைகள்"

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதி பில்லி ஹம்ப்ரே-ஈவ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இரவு 11.48 மணிக்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் 40 நிமிட இடைவெளியில் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.

    இதேபோன்ற சுவாரசியமான சம்பவம் குரேஷியா நாட்டிலும் அரங்கேறி உள்ளது. அங்கு ஒரு பெண்ணுக்கு டிசம்பர் 31-ந்தேதி இரவு 11.59 மணிக்கு ஒரு பெண் குழந்தையும், 2 நிமிடம் கழித்து ஜனவரி 1-ந்தேதி 12.01 மணிக்கு மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

    • 1992ம் ஆண்டில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை பயன்படுத்தப்பட்டது.
    • அமெரிக்க தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.

    அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.

    பிலிப்- ரேச்சல் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கரு மூட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெற முடிவு செய்த அவர்கள், அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்தை நாடினர்.


    அந்த மையத்தில் 1992ம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது.

    மருத்துவ உலகத்தில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் தற்போது முறியடித்துள்ளன.

    ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும், பெண் குழந்தைக்கு லிடியா என பெயர் சூட்டியுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தை பிலிப், நாங்கள் பெற விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையை மனதில் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 


    கடவுள் நமக்குக் கொடுக்க விரும்பும் அளவுக்கு எங்களிடம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே நினைத்ததாக அவர் கூறினார். மேலும் கரு தத்தெடுப்பு பற்றி கேள்விப்பட்டபோது, ​​நாங்கள் அதை செய்ய விரும்பினோம், எங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும் இவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்துள்ளதால், திமோத்தியும், லிடியாவும் தற்போது உலகிலேயே வயதான குழந்தைகளாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு.
    • கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது.

    நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். 


    இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பெங்களூரு பெண் ஒருவர் மார்பகத்தில் இருந்த மரபணு புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார்.
    மும்பை:

    பெங்களூரை சேர்ந்தவர் ஸ்வயம் பிரபா (37). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உடல் பரிசோதனை செய்தார். அப்போது மார்பக புற்றுநோய் உருவாகும் மரபணு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    எனவே இந்த புற்றுநோய் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடிவு செய்தார். அதற்காக தெற்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டர் பிருஷாபரிக் என்பவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவத்துவம் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுவை பிரித்து எடுக்க முடியும் என தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை மேற்கொண்டார்.

    மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணு முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில் அவருக்கு சோதனை குழாய் முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கடந்த 2-ந்தேதி ஸ்வயம் பிரபாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு இல்லாமல் பிறந்தன. இதனால் ஸ்வயம் பிரபாவும் அவரது கணவர் தெபாஷிஸ் பனிகிராகியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஸ்வயம் பிரபா கூறும்போது, “எனது தாயார் அவரது தங்கைகள் மற்றும் உறவினர்கள் பலர் புற்றுநோயாளிகளாவர். அந்த மரபணு எனது சகோதரிகளின் குழந்தைகளுக்கும் பரவியது. அந்த நிலையில் எனது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது. நோய் நொடி அற்றவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

    அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

    இத்தகைய மருத்துவ முறையில் குழந்தைகள் பிறந்து இருப்பது இந்தியா வில் இதுவே முதல் முறை யாகும்.

    மார்பக புற்றுநோய் மரபணு நீக்கி குழந்தைகள் உருவாக்கிய டாக்டர் பரிக் கூறும்போது, “மரபணு கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல நோய்களுடன் பிறந்துள்ளன. இத்தகைய மருத்துவ வசதியை பெற்றால் நோய்களுடன் குழந்தை பிறப்பதை தடுக்க முடியும்” என்றார்.
    ×