செய்திகள்

கர்நாடகா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2017-08-18 09:54 GMT   |   Update On 2017-08-18 09:54 GMT
கர்நாடகா மாநிலம் சென்னகிரி தாலுகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:

கர்நாடகா மாநிலம் சென்னகிரி தாலுகாவில் உள்ள வேலாள்கீர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலக்‌ஷப்பா (வயது 35). அவரது மனைவி சசிகலா (வயது 30). இவர்களுக்கு கார்த்திக் (வயது 7) மற்றும் வர்ஷினி (வயது 5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இன்று காலை பலக்‌ஷப்பா தனது குடும்பத்துடன் தற்கொலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிராமத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News