செய்திகள்
காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட குல்பாக் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
இதை கண்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட குல்பாக் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
இதை கண்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.