செய்திகள்

டெல்லி லோக் நாயக் பவனில் பயங்கர தீ விபத்து: அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்கள் சேதம்

Published On 2017-07-24 11:49 GMT   |   Update On 2017-07-24 11:50 GMT
டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள லோக் நாயக் பவனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் கருகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புதுடெல்லி:

டெல்லி துக்ளக் சாலையில் அமைந்துள்ளது லோக் நாயக் பவன். இந்த கட்டிடத்தில் பல்வேறு மத்திய அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இன்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, கட்டிடத்தின் 4-ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

ஒரு பகுதியில் பிடித்த தீயானது கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 25 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் தீ எரிந்ததால் அரசுத் துறை அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள் கருகி சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News