search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு அலுவலகங்கள்"

    • ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.
    • இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பூர்:

    மத்திய, மாநில அரசு சார்பில், பல்வேறு சேவைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு வரியினங்கள் செலுத்துதல், சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் இ - சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைனில், வரியினங்களை செலுத்த கிராமப்புறங்களில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக இணையதள வசதி போதுமான அளவு வேகம் இல்லாததால், காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்தை பதிவு செய்யவும் நீண்ட நேரம் ஆகிறது. காத்திருக்கும் மக்கள் வேறு வழியின்றி, நகரிலுள்ள இ - சேவை மையங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, கிராமப்புறங்களிலுள்ள, இ - சேவை மையங்கள், ஊராட்சி அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது, மத்திய அரசு திட்டத்தின் கீழ், கேபிள் வாயிலாக கிராமங்களிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு இணைய தள இணைப்பு வழங்க பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் வாயிலாக நகரங்களில் இருந்து, உடுமலை பகுதி கிராமங்களுக்கு கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.

    திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை மாவட்டத்தில் பாளையில் உள்ள மாவட்ட தொழில்மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.3.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உபகோட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தீபாவளி பரிசு பணம் என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கும் புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நேற்று மாலையில் இருந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது.

    கரூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம், வேலூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலையில் இருந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கணக்கில் வராத ஏராளமான பணம் இருந்தது. அதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனை சாவடி, தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை சோதனை சாவடி, திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் உள்ள சோதனை சாவடி ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருநெல்வேலியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 55). இவர் கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குநராக பொறுப்பேற்றார்.

    இவர் நேற்று மாலை பணியை முடித்து விட்டு ஒரு பையுடன் ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உமாசங்கர் கையில் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர்.

    அதில் கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை விருதுநகர் திருமலை நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.

    அங்கு கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். உமாசங்கரிடம் மொத்தம் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது துணை தாசில்தார் உள்பட 20 பேரிடம் கணக்கில் வராத ரூ. 57 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத ரூ. 45 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது தாசில்தார் ரவி பயன்படுத்தும் ஜீப்பில் இருந்து ரூ. 32ஆயிரத்து 500, அலுவலக பீரோ அருகில் ரூ. 15 ஆயிரம், கோப்புகள் நடுவே ரூ. 6 ஆயிரம் மற்றும் 5 பேர் வைத்திருந்த கணக்கில் வராத பணம் என ரூ. 64 ஆயிரத்து 500-யை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் பாளையில் உள்ள மாவட்ட தொழில்மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.3.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உபகோட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது செயற்பொறியாளர் ராஜரத்னம் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளராக கார்த்திக் பிரபு (வயது 39) பணியாற்றி வந்தனர்.

    நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வாங்க குழந்தையின் பெற்றோர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை தனலட்சுமி, கார்த்திக் பிரபு ஆகியோரிடம் கொடுத்தனர்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும் அங்கு 3 மணி நேரம் சோதனை நடந்தது.

    கோவை கே.ஜி.சாவடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் கணக்கில்வராத ரூ.25,680 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

    திருவாரூர் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மட்டும் கணக்கில் வராத ரூ.75 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது.

    நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.9 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

    மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், திருச்சி நகர்ப்புற வாழ்விட வாரிய கோட்ட அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலகம், மயிலாடு துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இங்கும் கணக்கில் வராத தீபாவளி பரிசு பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பொறியியல் பிரிவு துறை, திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில் இந்த சோதனை மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 13.4 ஏக்கர் பரப்பளவில் 3 லட்சம் சதுர அடியில் அரசு மாளிகையாக பிரம்மாண்டமாக ராணிப்பேட்டை புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் வருவாய் பிரிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூலம் அலுவலகம் மற்றும் சம்பள பிரிவு, மக்கள் குறைதீர்வு அரங்கம், மக்கள் தொடர்பு அலுவலகம், எல்காட் பிரிவு அலுவலகம் இயங்கவுள்ளது.

    முதல் தளத்தில் மாவட்ட கலெக்டர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், சிடிஇ பிரிவு அலுவலகம், கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் பொது, தேர்தல், கணக்கு ஆகியோரின் அலுவலகங்கள், கலந்தாய்வு அரங்கம், தேர்தல் மற்றும் வருவாய் அலுவலகம் ஆகியவை இயங்கும், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், திட்ட இயக்குனர் அறை, கூட்டரங்கம், பஞ்சாயத்து உதவி இயக்குனர், மாவட்ட ஊரகப்பிரிவு தேர்தல் அலுவலகம், மதிய உணவு நேர்முக உதவியாளர் பிரிவு அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறு கூட்டரங்கம், கலந்தாய்வு அரங்கம், திட்ட இயக்குனர் (ஐசிடிஎஸ்) அலுவலகங்கள் இயங்கவுள்ளன.

    மூன்றாம் தளத்தில் கூட்டுறவு சங்க இணை இயக்குனர், பதிவுத்துறை அலுவலகம், வேளாண் இணை இயக்குனர் பிரிவு அலுவலகம், கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலகம், சுகாதாரப் பிரிவு இணை இயக்குன அலுவலகம், மகளிர் திட்ட அலுவலர் அலுவலகம் இயக்கப்படவுள்ளது. நான்காம் தளத்தில் வனத்துறை அலுவலகம், சிறு கூட்டரங்கம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆரம்ப கல்வி அலுவலர், ஆதிதிராவிட நலத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய போட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ் வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, அலுவலகங்கள் மற்றும் கூட்டரங்கம் இயங்கும். கலெக்டர் அலு வலகத்தில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 12 லிப்ட், மாற்றுத்தி றனாளி களுக்கான சாயதள வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, செயற்கை நீர் ஊற்று ஆகியவையும் கட்டிடத்தில் உள்ளன.

    கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்காக உணவகம், அடிப்படை வசதிகள் வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்ப ட்டுள்ளது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்.

    ×