செய்திகள்

ராஜஸ்தான்: பேருந்து விபத்தில் 9 யாத்ரீகர்கள் பலி-பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-07-22 09:38 GMT   |   Update On 2017-07-22 09:38 GMT
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சிலர் 16 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார், புஷ்கர் ஆகிய ஸ்தலங்கள் செல்வதற்காக பேருந்தில் நேற்றிரவு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள நேஹ்லா என்ற கிராமத்தின் அருகே இன்று காலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்திலிருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான செய்திகளை அறிந்து வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பலியானவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்து சிகிச்சைபெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News