செய்திகள்
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: ஓ.பி.எஸ். அணிக்கு சட்ட உதவி வழங்க தலைமை வக்கீல் மறுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு சட்ட உதவி வழங்க இயலாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என்று அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களுக்கு சட்ட உதவி அளிக்குமாறு, சமீபத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட கே.கே.வேணுகோபாலிடம் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க வக்கீல் வேணுகோபால் மறுத்து விட்டார். ஓ.பி.எஸ். அணிக்கு தன்னால் சட்ட உதவி அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என்று அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களுக்கு சட்ட உதவி அளிக்குமாறு, சமீபத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட கே.கே.வேணுகோபாலிடம் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க வக்கீல் வேணுகோபால் மறுத்து விட்டார். ஓ.பி.எஸ். அணிக்கு தன்னால் சட்ட உதவி அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.