செய்திகள்
திருப்பதியில் மாயமான முன்னாள் எம்.எல்.ஏ. மீட்பு
திருப்பதி மலையில் கடந்த சனிக்கிழமையன்று மாயமான தெலுங்கானா மாநிலம் ஏலூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குஞ்சபிஷ்சம் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் மீட்கப்பட்டார்.
திருப்பதி:
முன்னாள் எம்.எல்.ஏ. குஞ்சபிஷ்சம் குடும்பத்தாருடன் சாமி தரிசத்துக்காக கடந்த சனிக்கிழமை திருப்பதி மலைக்கு வந்தார். அன்று காலை ஏழுமலையானை தரிசித்து விட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த குஞ்சபிஷ்சம் திடீரென மாயமானார்.
புத்தி சுவாதீனம் இல்லாத நிலையில் காணப்படும் அவர் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் திருப்பதி மலையில் இருக்கும் அன்னதான கட்டடம் அருகே நடமாடியது சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. எனவே அவர் திருப்பதி மலையில் எங்கே இருக்கிறார் என்று போலீசார் தேடினர்.
நேற்று மதியம் அவரை திருப்பதியில் இருக்கும் கரக்கம்பாடி பகுதியில் பார்த்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவினர் அழைத்து வந்து மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளித்து திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. குஞ்சபிஷ்சம் குடும்பத்தாருடன் சாமி தரிசத்துக்காக கடந்த சனிக்கிழமை திருப்பதி மலைக்கு வந்தார். அன்று காலை ஏழுமலையானை தரிசித்து விட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த குஞ்சபிஷ்சம் திடீரென மாயமானார்.
புத்தி சுவாதீனம் இல்லாத நிலையில் காணப்படும் அவர் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் திருப்பதி மலையில் இருக்கும் அன்னதான கட்டடம் அருகே நடமாடியது சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. எனவே அவர் திருப்பதி மலையில் எங்கே இருக்கிறார் என்று போலீசார் தேடினர்.
நேற்று மதியம் அவரை திருப்பதியில் இருக்கும் கரக்கம்பாடி பகுதியில் பார்த்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவினர் அழைத்து வந்து மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளித்து திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.