செய்திகள்
மேற்குவங்காளத்தில் கால்நடைகளை திருட முயன்ற 3 பேர் அடித்துக்கொலை
மேற்கு வங்காளத்தில் கால்நடைகளை திருட முயன்ற மர்ம நபர்கள் 3 பேரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிர் இழந்தனர்.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரில் வசித்து வருபவர் அதுல் போஸ். இவர் தனது வீட்டில் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 3 பேர் அதுல் போஸ் வீட்டுக்குள் நுழைந்து, கால்நடைகளை திருடி செல்ல முயற்சித்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்தவர்கள் திருடர்களை பார்த்து, சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் திரண்டனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, கால்நடைகளை திருட முயன்ற மர்ம நபர்கள் 3 பேரையும் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரில் வசித்து வருபவர் அதுல் போஸ். இவர் தனது வீட்டில் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 3 பேர் அதுல் போஸ் வீட்டுக்குள் நுழைந்து, கால்நடைகளை திருடி செல்ல முயற்சித்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்தவர்கள் திருடர்களை பார்த்து, சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் திரண்டனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, கால்நடைகளை திருட முயன்ற மர்ம நபர்கள் 3 பேரையும் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.