செய்திகள்

யோகா தின கொண்டாட்டத்தில் மாணவியிடம் சில்மிஷம்: கல்லூரி மேலாளர் கைது

Published On 2017-06-21 19:59 GMT   |   Update On 2017-06-21 19:59 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தின கொண்டாட்டத்தின் போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தின கொண்டாட்டத்தின் போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியிடம் அக்கல்லூரியின் மேலாளர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அம்மாணவி தனது நண்பர்களுடன் போலீசில் சென்று புகாரளித்துள்ளார்.

புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மேலாளரை கைது செய்தனர்.
Tags:    

Similar News