செய்திகள்

சட்டீஸ்கர்: என்கவுண்ட்டரில் பெண் கமாண்டர் உட்பட 3 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை

Published On 2017-06-18 15:27 GMT   |   Update On 2017-06-18 15:27 GMT
சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நாண்ட்கான் பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பெண் கமாண்டர் உட்பட 3 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:

சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நாண்ட்கான் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்  போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது போலீசாருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

பெந்தோரி என்ற கிராமத்திற்கு அருகில் அவுந்தி காவல்நிலைய எல்லைக்குள் மதியம் 2 மணியளவில் இந்த என்கவுண்ட்டர் நடத்தப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்ட்டரில் பெண் கமெண்ட்டர் ஒருவர் உட்பட 3 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் அவுந்தி பகுதியை சேர்ந்த சமீல என்பது அவர் அப்பகுதி மவோயிஸ்ட் கமிட்டியில் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News