செய்திகள்
பீகார்: கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 23 பேர் பலி
பீகார் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சம்பரான் மாவட்டத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிக்கு 50-70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் வீசியதைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததாக பேரிடர் மீட்பு குழுவின் கூடுதல் தலைவர் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சம்பரான் மாவட்டத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிக்கு 50-70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் வீசியதைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததாக பேரிடர் மீட்பு குழுவின் கூடுதல் தலைவர் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.