செய்திகள்
மத்தியப் பிரதேசம்: கார் விபத்தில் மணமகன் உள்பட 9 பேர் பரிதாப பலி
மத்தியப் பிரதேசம் மாநிலம், கார்கோன் மாநிலத்தில் இன்று கார் மீது லாரி மோதிய விபத்தில் மணமகன் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேசம் மாநிலம், சேஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் கிராமத்தை சேர்ந்த திருமண வீட்டார் தார் மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற கிராமத்தை நோக்கி ஒரு காரில் இன்று சென்று கொண்டிருந்தனர்
கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, பின்னால் படுவேகமாக வந்த டிரெய்லர் லாரி அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மணமகன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தூரில் உள்ள மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த விபத்தின் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், சேஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் கிராமத்தை சேர்ந்த திருமண வீட்டார் தார் மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற கிராமத்தை நோக்கி ஒரு காரில் இன்று சென்று கொண்டிருந்தனர்
கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, பின்னால் படுவேகமாக வந்த டிரெய்லர் லாரி அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மணமகன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தூரில் உள்ள மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த விபத்தின் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.