search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 பேர் பலி"

    • 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருந்துறை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் பருத்தி கண்மாய் பகுதியை சேர்ந்தவர் பஞ்சு மகன் ராஜ்குமார் (வயது 42), கோவை மாவட்டம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மகன் ஸ்ரீதர் (32),

    பவானி ஈஸ்வரன் கோவில் பகுதி யைச் சேர்ந்த சின்னப்பி ள்ளை என்ற ருக்மணி (70), பங்களாபுதூர் கொங்க ர்பாளையத்தை சேர்ந்த பொன்னக்கால் (60), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (32), நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் காளிமுத்து (29), கடையா ம்பாளையம் முருகன் மனைவி செல்வி (50), கணக்கம்பாளையம் பாரதி தெரு ஆபிரகாம் (50), பவானிசாகர் தொப்பம்பாளையம் அனுமந்தன் மகன் மாரப்பன் என்ற மாறன் (40) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் இடையா ம்பாளையம் பகுதியில் பொது இடத்தில் மது அரு ந்திய குற்றத்திற்காக கட த்தூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சந்தோஷ்கு மார் (27) என்ப வர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருந்துறை, சென்னிமலை, பர்கூர், வெள்ளி திருப்பூர், கடத்தூர், சத்தியமங்கலம், பங்களாபுதூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுரேஷ்கு மார் (வயது 41),

    கருங்கல்பாளையம் மரப்பாளையம் சாலையை சேர்ந்த சம்பத் மகன் சக்திவேல் (44), சென்னிமலை ஆறுமுகம் மகன் நாகராஜ் (59), பர்கூர் ராஜா (33),

    அந்தியூர் மாணிக்கம் மகன் பிரபு (41), மங்களாபுரம் சுந்தரம் மகன் சதீஷ் என்ற சுரேஷ் (40), சத்தியமங்கலம் சொர்ணம் மகன் பாலு (55), பாரதி நகர் மினியல் (60), டி.என்.பா ளையம் செல்வன் மனைவி ஈஸ்வரி (45) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை ஏதேனும் நடை பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு டவுண், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கொல்லம்பாளையம், சென்னிமலை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி ஆகிய பகுதி களில் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரம ணியன் (வயது 56),

    சென்னி மலை துரைசாமி (60), ஈரோடு அதியமான் நகர் மாதேஸ்வரன் (40), மும்பை யை சேர்ந்த கார்த்தி, பங்க ளாபுதூர் கௌதம் (26), கருவம்பாளையம் ராமசாமி (57), குள்ளம்பாளையம் நடராஜ் (31), எண்ணமங்கலம் சசி (39) ஆகியோரை போலீ சார் மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பெருந்துறை பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ராஜ மாணிக்கம் (44) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் வைத்திருந்த 8 மது பாட்டி ல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் (55), அரவிந்த் (28) மற்றும் ஆறுமுகம் மனைவி பத்தாமணி (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • பொது வழித்தட பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏரியூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் சதீஷ்குமார் (வயது28) விவசாயி. இவரது குடும்பத்திற்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவரான ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் கடந்த 15 ஆண்டுகளாக பொது வழித்தட பிரச்சனை இருந்து வந்தது.

    இந்நிலையில், நேற்று மாலை சதீஷ்குமார் தனது நிலத்தில் இருந்த பொழுது, பக்கத்து நிலத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனைப் பார்த்த சதீஷ்குமாரின் சகோதரர் அய்யந்துரை தட்டி கேட்டதாகவும் இதனால் ஆறுமுகம் தனது மகன் அரவிந்துடன் சேர்ந்து அய்யந்துரையையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் இதனை தடுக்க சென்ற சதீஷ்குமாரின் தாயார் மற்றும் அண்ணியையும் ஆறுமுகத்தின் மனைவி தாக்கியதாகவும், ஆறுமுகம் மற்றும் அரவிந்த் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த சதீஷ்குமார் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆறுமுகம் (55), அரவிந்த் (28) மற்றும் ஆறுமுகம் மனைவி பத்தாமணி (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோன்று ஆறுமுகம் மனைவி பத்தாமணி தன்னையும் தனது கணவரையும், அய்யந்துரை, சதீஷ்குமார், அருள், பெருமா, சுசீலா, சரிதா ஆகிய ஆறு பேரும் சேர்ந்து தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் இவர்கள் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பொது வழித்தட பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.
    • போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர்.

    ன்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும் ஒருமையில் பேசியதற்காகவும் 9 பேர் மீது வழக்கு பதிவு.

    மாத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், இவருடைய மகன்கள் சரண்ராஜ் (33) குமரவேல் (35) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம், பட்டா வழங்கியதில் தவறு நடந்திருப்பதாகவும் அதனை மாற்றி கொடுக்கும்படி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த மனுவின் மீது தாசில்தார் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி நேற்று குமரவேல், சரண்ராஜ், முருகேசன், உள்ளிட்ட 9  பேர் தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடத்தில் துணை வட்டாட்சியர் சீனிவாசன் தங்கள் கோரிக்கைகளை பரிசிளிப்பதாகவும் கலைந்து செல்லும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் போராட்டக்காரர்கள் தகாத வார்த்தைகளால் ஒருமையாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

    பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் மீது தாசில்தார் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும், ஒருமையில் பேசியதற்காகவும், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈரோட்டில் 4 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    • பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணமடைந்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே மாதம் 4-ந் தேதி குணமடைந்தார். அதன்பின் தொற்று இல்லாத மாவட்ட மானது ஈரோடு.

    பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மீண்டும் மெல்ல மெல்ல கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

    இதனால் பொது மக்கள் மீண்டும் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Nigerian #BrutalAttack
    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.

    கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.   #Nigerian #BrutalAttack 
    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. புதிய புத்தகம் அச்சிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு தயாரிக்கிறது.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

    போராட்டமும் நடத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே, சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சைக்குரிய பகுதி, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது.

    அதன்படி, மேற்படி பாடத்தில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை முற்றிலும் நீக்கம் செய்து, புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பாடத்துடன் கிரிக்கெட் உள்ளிட்ட மேலும் சில பாடங்கள் என மொத்தம் 70 பக்கங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

    மொகடிஷு மால் அருகே நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
    ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபரை தாக்கியதாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் மோனிஷ்குமார் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மோனிஷ்குமார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேகநாதனுக்கும் மோனிஷ்குமாருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    பின்னர் அங்கிருந்து சென்ற மேகநாதன் தனது உறவினர்களுடன் மோனிஷ்குமார் வீட்டிற்குள் புகுந்து சரமாறியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் மோனிஷ்குமார் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து மோனிஷ்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மேகநாதன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, யுகேஷ், கிஷோர், சசிகலா, உமா, தனலட்சுமி, சரஸ்வதி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். #Chile #RoadCrash
    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

    இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

    சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  #Chile #RoadCrash
    ×