search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே வாலிபரை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
    X

    ஜோலார்பேட்டை அருகே வாலிபரை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

    ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபரை தாக்கியதாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் மோனிஷ்குமார் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மோனிஷ்குமார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேகநாதனுக்கும் மோனிஷ்குமாருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    பின்னர் அங்கிருந்து சென்ற மேகநாதன் தனது உறவினர்களுடன் மோனிஷ்குமார் வீட்டிற்குள் புகுந்து சரமாறியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் மோனிஷ்குமார் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து மோனிஷ்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மேகநாதன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, யுகேஷ், கிஷோர், சசிகலா, உமா, தனலட்சுமி, சரஸ்வதி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×