search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car bombing"

    சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #carbombing #Mogadishucarbombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

    அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அலுவலகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரி சக்கர் இபுராஹிம் அப்தல்லா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 

    பலத்த காயங்களுடன் பத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #carbombing #Mogadishucarbombing
    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

    மொகடிஷு மால் அருகே நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
    கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. #ColumbiaSchoolAttack
    போகோடா:

    மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில் நேற்று விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொலம்பியா போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. #ColumbiaSchoolAttack
    கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #ColumbiaCarBomb
    போகோடா:

    மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கார் வெடிகுண்டு தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #ColumbiaCarBomb
    ×