search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gunmen"

    • 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இஸ்தான்புல் நகர சான்டா மரியா தேவாலயம்
    • தேவாலயத்திற்கு உள்ளே நுழைந்தவரை 2 பேர் பின் தொடர்ந்தனர்

    மேற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஐரோப்பாவிலும் பரந்து விரிந்திருக்கும் நாடு, துருக்கி. இதன் தலைநகரம் அங்காரா (Ankara).

    துருக்கியின் இஸ்தான்புல் (Istanbul) நகரில் உள்ளது 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சான்டா மரியா தேவாலயம்.

    நேற்று காலை, வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக அங்கு வந்திருந்தவர்கள், மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

    பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமூடி அணிந்த 2 பேர் அந்த தேவாலயத்தின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர்.

    அப்போது உள்ளே நுழைந்த ஒருவரை அவர்கள் பின் தொடர்ந்தனர்.

    இருவரும், திடீரென அவரை நோக்கி சுட்டனர். இதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார். சுட்டவர்கள் உடனே அங்கிருந்து தப்பி விட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

    உயிரிழந்தவருக்கு 52 வயது என்றும், ஞானஸ்னானம் பெற இருந்தவர் என்றும் அவரது உறவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்தான்புல் நகர மேயர், எக்ரெம் இமாமொக்லு, "அமைதியான இப்பகுதியில் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானது. நமது நகரத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என தெரிவித்தார்.

    துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், இத்தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

    பின்னர், துருக்கியின் உள்துறை மந்திரி, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ரஷியர் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Nigerian #BrutalAttack
    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.

    கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.   #Nigerian #BrutalAttack 
    நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்த அலெக்ஸ் படேஹ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். #Nigeriaformerdefencechief #AlexBadeh
    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அலெக்ஸ் படேஹ். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானப்படை தளபதியாக பதவியேற்ற இவர், பின்னர் முப்படைகளின் தளபதியாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். 13-7-2015 அன்றுவரை இந்த பதவியில்இருந்தார்.

    பணி ஓய்வு பெற்ற நிலையில் தனது பண்ணையில் இருந்து நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அலெக்ஸ் படேஹ்-வை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Nigeriaformerdefencechief #AlexBadeh
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மர்ம நபர்கள் இன்று வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. #JKBank #CashLoot
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தின் குய்மோ பகுதியில் ஜம்மு காஷ்மீர் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் துப்பாக்கிகளை காட்டி மிரட்டினர். அதன்பின்னர், வங்கியில் இருந்த 3.20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JKBank #CashLoot
    ×