செய்திகள்
விமான பணிப் பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளம் வியாபாரி கைது
ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் இரண்டு பணிப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை:
நாக்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தில் இரண்டு பணிப் பெண்களுக்கு இளம் வியாபாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
23-வயதான ஆகாஷ் குப்தா என்ற அந்த வியாபாரி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பணிப்பெண்கள் கடிதம் மூலம் கேப்டனுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட கேப்டன் கோபால் சிங், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நாக்பூரில் உள்ள சோனெகான் போலீசாருக்கு புகாரினை அனுப்பினார். சொனெகான் போலீசார் ஆகாஷ் குப்தாவை கைது செய்தனர்.
போலீசார் தங்களது விசாரணை முடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஆகாஷ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.