கோபி அருகே இரும்பு வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
கோபி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி அசோக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குட்டியண்ணன், சுந்தர வடிவேல் மற்றும் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனை மேற் கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.
கோபியில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றதாகவும், கேராளாவுக்கு பழைய இரும்பு சாமான்கள் வாங்க செல்வதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததது தெரிய வந்தது.
இதையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து சென்றதாக கூறி 2 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.
பறிமுதல் செய்த பணத்தை கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls