உள்ளூர் செய்திகள்
- இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
- மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மகள் லில்லி (வயது 42). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்துமருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து மாயமான லில்லியை தேடி வருகிறார்.