உள்ளூர் செய்திகள்

பலியான ஜெயக்கொடி.

பாம்பு கடித்து பெண் சாவு

Published On 2022-09-14 09:57 GMT   |   Update On 2022-09-14 09:57 GMT
  • கருப்பன்குளம் வாய்க்காலில் கடந்த 10-ம் தேதி நூறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்றது.
  • பாம்பு கடித்து மயக்கமடைந்த ஜெயக்கொடியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணுலாம்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே கோவில் ராமாபுரம் செறுகடம்பூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் தொழிலாளி. இவரது மனைவி ஜெயக்கொடி.

(வயது 62) இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள் உள்ளனர், மகன் ஆனந்தன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

அதே பகுதியில் உள்ள கருப்பன் குளம் வாய்க்காலில் இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிகள் நடைபெற்றது.

அப்போது ஜெயக்கொடி காலில் பாம்பு கடித்து ரத்தம் கொட்டியது இதில் மயக்கம் அடைந்த ஜெயக்கொடியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணுலாம்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .

சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார் இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News