உள்ளூர் செய்திகள்

மது குடிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

Published On 2022-12-16 09:27 GMT   |   Update On 2022-12-16 09:31 GMT
  • மது குடிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
  • கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்

கரூர்

கரூர் காந்திகிராமம் இந்திராநகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 16). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மனோஜ் தனது நண்பர் தீபன்ராஜ் என்பவருடன் போக்குவரத்து நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த பிரஜோல் (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரையும் மது குடிக்க வற்புறுத்தி மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோஜ், தீபன்ராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் வழக்குப்பதிந்து, பிரஜோலை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News