உள்ளூர் செய்திகள்
ரூ.4 லட்சத்து 27ஆயிரம் வசூலித்து ஏமாற்றிய ஊழியர்
- ரூ.4 லட்சத்து 27ஆயிரத்தை வசூலித்து ஊழியர் ஏமாற்றிவிட்டார்
- மார்க்கெட்டிங் நிறுவனத்தில் நடந்த சம்பவம்
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் ஜெ.கே. நகர் கோவில் தெரு பகுதியில் ஜா மார்க்கெட்டிங் கம்பெனி அமைந்துள்ளது. இதில் திருச்சி ஜீயபுரம் கரியக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 32 )என்பவர் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் வீடுகளுக்கு சென்று வசூல் செய்யும் தொகையை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. பின்னர் அலுவலக தணிக்கையில் சிவப்பி ரகாசம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 890 தொகையை கையாடல் செய்திருப்பது கண்டுபி டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மா ர்க்கெட்டிங் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் மதுரை அவனியாபுரம் மேலப்புது தெரு பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் ஏர்போர்ட் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.