தமிழ்நாடு

சென்னையில் வறட்சி ஏற்படும் அபாயம்- பொது மக்களே உஷார்...

Published On 2024-05-27 10:21 GMT   |   Update On 2024-05-27 10:21 GMT
  • வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வாகனங்களை கழுவவும், தோட்டங்களுக்கு குழாய் வழியாக வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் குறைந்து வருகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வெறும் 5 ஆயிரத்து 665 மி. கன அடி மட்டுமே உள்ளது.

இதில் பூண்டி, சோழவரம் ஏரிகள் வறண்டு விடும் நிலைக்கு சென்று விட்டன.

எனினும் தற்போது போதுமான அளவு குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் தினந்தோறும் 10.86 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.


இதில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள போர்வெல் தண்ணீரையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் வறண்டு வருவதால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வாகனங்களை கழுவவும், தோட்டங்களுக்கு குழாய் வழியாக வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மெட்ரோ வாட்டார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் குழாய் மூலம் வரும் தண்ணீரை குடிக்கவும் பயன்படுத்த வேண்டும். போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்து வருவதால் மற்ற தேவைகளுக்கு இந்த தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News