உள்ளூர் செய்திகள்

மன விரக்தியில் இளம்பெண் மாயம்

Published On 2022-08-09 09:50 GMT   |   Update On 2022-08-09 09:50 GMT
  • மன விரக்தியில் இளம்பெண் மாயமானார்
  • 3 வருடமாக கணவர் பேசவில்லை.

திருச்சி:

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கனி (65). இவரது மகன் முகமது சபீர் கடந்த 3 வருட காலமாக மலேசியா நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பரிமளா பானுவை பார்க்க வராமல் இருப்பதோடு, சரியாக செல்போனில் பேசுவதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரிமளா பானு வீட்டை விட்டு வெளியேறியனார். இது குறித்து பிச்சைக்கனி அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News