உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நியமனத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்

Published On 2022-08-02 07:38 GMT   |   Update On 2022-08-02 07:38 GMT
  • தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நியமனத்தை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி வலியுறுத்தல்

திருச்சி:

தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியின் தலைவர் பூரா.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகள், என்.எல்.சி., ெரயில்வே துறை மற்றும் மருத்துவத் துறைகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக நியமிக்கப்படுகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இல்லை எனில் தமிழகத்தில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

இங்கு படித்த இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை தமிழகத்தில் ெரயில்வே துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலையில் அமர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஆர்.எஸ். பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். இதில் தமிழக தலைவர்கள் விழித்துக் கொண்டு எதிர்க்கவும் போராடவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News