உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2022-12-13 09:59 GMT   |   Update On 2022-12-13 09:59 GMT
  • கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
  • போலீசாருக்கு வந்த தகவல்படி நடவடிக்கை

திருச்சி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஜெய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று பஞ்சப்பூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த விக்னேஷ் ( 30) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தபெத்து ராஜா ( 52) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News