புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகள் கைது
- புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
திருச்சி,
திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரியாக செயல்படுபவர் பாண்டி. இவர் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் கரூர் பைபாஸ் ரோடு தனியார் திருமண மண்டபம் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த, பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சீனிவாசன் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் ஆறு லட்சத்து 57 ஆயிரம் மற்றும் செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றி உள்ளனர்.
இதே போன்று திருச்சி ஜீவா நகர் அண்ணா தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக மளிகை கடையில் உள்ள பாண்டியன் (வயது47) என்பவரை போலீசார் கைது செய்து அவரிமிருந்து புகையிலைப் பொருட்கள், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.