உள்ளூர் செய்திகள்

பணத் தகராறில் 2 பேர் மோதல்

Published On 2022-06-18 09:30 GMT   |   Update On 2022-06-18 09:30 GMT
  • பணத் தகராறில் 2 பேருக்குள் மோதல் ஏற்பட்டது
  • வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

திருச்சி:

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய நண்பரான வேலு என்பவர் பிஎம்எஸ் கார் கன்சல்டிங் என்ற நிறுவனத்தை கண்டோன்மென்ட் பகுதியில் நடத்தி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் தியாகராஜன் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலு என்பவர் மூலம் ஆதித்தியன் என்பவரிடம் வாங்கியுள்ளார். ஒவ்வொரு மாதமும் 10 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தி வந்த அவர் கடந்த ஒரு மாதம் மட்டும் வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தியாகராஜன் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News