உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2023-05-15 08:21 GMT   |   Update On 2023-05-15 08:21 GMT
  • அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 அவினாசி :

அவினாசி அருகே கஞ்சா வைத்திருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி மங்கலம் ரோடு கருணை பாளையம் பிரிவு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சயிராப் குமார் (25 ) என்பதும் அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News