உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் மாநாடு பா.ஜ.க.வினர் நூதன பிரசாரம்

Published On 2022-07-11 05:51 GMT   |   Update On 2022-07-11 05:51 GMT
  • மாநாடு குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
  • ஒளிரும் விளம்பர பதாகைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும் ‘ரோபோடிக்’ பிரசாரம் தொடங்கியுள்ளது.

திருப்பூர் :

திருப்பூரை அடுத்த பல்லடத்தில் வருகிற 17-ந்தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை மாநாடு நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இந்த நிலையில் மாநாடு குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 'எல்.இ.டி. வாக்கர்ஸ்' என்ற பெயரில்ஒளிரும் விளம்பர பதாகைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும் 'ரோபோடிக்' பிரசாரம் தொடங்கியுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் இந்த நூதன பிரசாரத்தை தொடங்கிவைத்தனர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் பாண்டி, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இதில் கலந்து கொண்ட வாலிபர்கள் ஒளிரும் விளம்பர பதாகைகளை முதுகில் அணிந்து கொண்டு பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூதன பிரசாரத்தை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News