உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் மாரத்தான் போட்டி நாளை நடக்கிறது
- மாரத்தான் போட்டி காலை 5.30 மணிக்கு நடக்கிறது.
- காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பழனிப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.
காங்கயம் :
காங்கயம் டவுன் ரோட்டரி நடத்தும் மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவிமுத்துசாமி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்கள்.
மாரத்தான் போட்டி காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள பழனிப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.