உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் இளம்பெண் மர்ம சாவு உறவினர்கள் போராட்டம்
- வயிற்றுவலி காரணமாக லாவண்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
- குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த குள்ளாகிபாளையத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் கோழிப்பண்ணையும், விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மனைவி லாவண்யா( வயது 27). இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. வயிற்றுவலி காரணமாக லாவண்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.மேலும் லாவண்யா உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் லாவண்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி லாவண்யா உறவினர்கள் அவரது கணவர் சுகுமாரின் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.