search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம சாவு"

    புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஓறையூர்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா (வயது 19), இவருக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். அகல்யா,கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்தார். தனது மகன் சசிதரனுக்கு இட்லி ஊட்டி உள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலையை கவனித்தார்.பிறகு குழந்தையை எழுப்பிய போது குழந்தை அசைவில்லாமல் இருந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரே தபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வத்திராயிருப்பு அருகே விவசாய தொழிலாளி மோட்டார் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
    • மகளுக்கு திருமண நிச்சயம் செய்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை அடுத்துள்ள ஆத்தங்கரை பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). இவருக்கு கிருஷ்ணம்மாள் (39) என்ற மனைவியும், மகன் மகள்களும் உள்ளனர்.

    ராஜா மற்றும் அவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து விவசாயம் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜா தனது மகளுக்கு திருமண நிச்சயம் செய்தி ருந்தார். இதற்காக உறவினர் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழை கொடுத்து வந்தனர்.

    சம்பவத்தன்று கிருஷ் ணம்மாள் மட்டும் திரும ணத்திற்கு அழைப்பிதழை கொடுக்க வெளியூர் சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்பு ஊர் திரும்பிய கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணம்மாள் உடனே கூமாபட்டி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார்.
    • தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் (51) இவரது தம்பி செல்வம் (45)தி.மு.க. பிரமுகர். இவர்கள் இருவரும்குணசேகரன் மகனை பார்ப்பதற்காக நேற்று இரவு புதுவை மாநிலம் குருவிநத்தத்துக்கு சென்றனர் பின்பு இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார். .வரும் வழியில் புதுவை மாநிலத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வந்தனர்.பண்ருட்டி காந்தி ரோடு சாரதா பள்ளி அருகே சென்று கொண்டி ருந்த போதுஇவர்களுக்கு போதை அதிகமாகி காந்தி ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்தனர்.

    பின்பு குணசேகரன் மோட்டார்சைக்கிள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.காலை 6 மணிக்கு போதை தெளிந்து தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார். பண்ருட்டியில் தம்பி செல்வம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் போதையில் இறந்தாரா? வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 68). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது பக்கத்து நிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் உலகநாதன் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அருகே மயங்கி கிடப்பதாக கூறினர்.

    பின்னர் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உலகநாதனின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கில் பிணமாக கிடந்தார்
    • சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ராமர் கோவில் தெரு சேர்ந்தவர் சுந்தர். ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி தரணி (வயது 23) திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தரணி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணையில் கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    வாணியம்பாடி சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பெரியங்குப்பத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று மாலை துத்திப்பட்டு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மோகன சுந்தரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டையை சேர்ந்தவர் சின்னபையன் (வயது64). பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 19-ந் ்தேதி அன்று இரவு இவரது கடையில் வாலிபர் ஒருவர் சிகரெட்டு கேட்டதில் வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் அந்த வாலிபர் தாக்கியதில் சின்னப்பையனுக்கு வாயில் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் சின்னப்பையன் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறவே அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் சிகரெட் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கியதால் சின்னபையன் இறந்து விட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊர் மக்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • தேவதாசை யாராவது அடித்து கொலை செய்தார்களா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என விசாரணை

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே பாலப்பள்ளி கூவர விளையை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது55). கட்டிட தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு 3 பிள்ளைகள் உண்டு. மூவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்றைய முன்தினம் தேவதாஸ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் நேற்று அவர் ஊர் அருகில் உள்ள கொற்றி குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த ஊர் மக்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்துபோன தேவதாசின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதனால் தேவதாசை யாராவது அடித்து கொலை செய்தார்களா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிரேத பரிசோ தனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாது சுந்தர் சிங் வழக்குப்பதிவு செய்தார்.

    • கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
    • இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்க ணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகு தியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    மீனாவின் கணவர் வேலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மீனா தனது குழந்தைகளுடன் கச்சுப்பள்ளி கிராமம் எட்டிகுட்டைமேடு பகுதி யில் வசித்து வந்தார்.

    தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மீனா, சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கச்சுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில், மகன் படிப்பிற்காக தாரமங்கலத் தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த மீனா, தனது மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    மர்மசாவு

    இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, மீனா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா வின் உடலை பார்த்து உறவி னர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    சந்தேகம்

    பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த மீனா தூக்கில் பிண மாக தொங்கியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீ சார், வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்க ளிடமும், அவரது உறவி னர்களிடமும் தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மீனா, ஏற்கனவே வேலை பார்த்து வந்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இது பற்றி போலீசார் கூறுகையில், மீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட பட்டாரா? என்ற உண்மை தெரிய வரும். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண், மர்ம மான முறையில் உயிரிழந் துள்ள சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சில நாட்களாக மன வேதனையில் இருந்தார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்து பின்னதுரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ரகு (வயது 29), கட்டிட தொழில் செய்து வந்தார்.

    இவருக்கும் கீழ் கொத்தூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சினேகாவுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மனைவி சினேகா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை ரகு மனைவியை வீட்டுக்கு அவர் வரவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ரகு மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 10 மணி அளவில் ரகு, அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரகுவின் உறவினர்கள் பலவேறு இடங்களில் அவரைதேடினர்.

    இந்த நிலையில் மடையப்பட்டு அருகே உள்ள கருத்த மலை காப்புக்காட்டு பகுதி யில் உள்ள கசிவுநீர் குட்டை அருகே மர்மமான முறையில் ரகு இறந்து கிடந்ததை அந்த வழியாகசென்றவர்கள் பார்த் துள்ளனர்.

    இது குறித்து தக வல் கிடைத்ததும் வேப்பங் குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ரகுவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
    • சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் அங்காளம்மன் கோவில் தெருவவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 39). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் திருவெண்ணைநல்லூர் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை வேலை செய்து வந்தார்.

    பின்னர் உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர். அவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததாக கூறி பெட்ரோல் பங்கில் உள்ள ஓய்வறையில் படுத்துறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. ஊழியர்கள் அவரை எழுப்பிய போதும், அவர் எழவில்லை. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கதிரவனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதிரவன் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பத் அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார்.
    • பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் சம்பத்(வயது35) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பழைய சிறுவங்கூரில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார். மறுநாள் காலையில் சம்பத் மயங்கிய நிலையில் கிடந்ததாக தொிகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

    ×