உள்ளூர் செய்திகள்

பல்லடம் ரேசன் கடையில் திருப்பூர் மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ரேசன் கடைகளில் அதிகாரி ஆய்வு

Published On 2023-03-24 08:26 GMT   |   Update On 2023-03-24 08:26 GMT
  • பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல்லடம் :

பல்லடம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திருப்பூர் மாவட்ட பொதுவிநி யோகத் திட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கணபதிபா ளையம், கரைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா ? என ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

எந்த ஒரு குடும்ப அட்டைதாரருக்கும் உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு பொருட்களின் மாதிரிகளை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News