உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட பெண்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா

Published On 2022-06-06 11:10 GMT   |   Update On 2022-06-06 11:10 GMT
  • வீட்டை காலி செய்ய சொல்லி தினமும் உறவினர்களுடன் வந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
  • அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அன்னமேரி.

திருப்பூர்:

அரசால் ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு இடத்தை போலி பத்திரத்தை காட்டி அபகரிக்க முயலுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட அன்னமேரி கூறுகையில், திருப்பூர் மிலிட்டரி காலனியில் அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில், ரெயில் நிலைய பகுதியில் வசிக்கும் ஒருவர் எனது கணவருக்கு அரசால் வழங்கப்பட்ட இடத்தை விற்று விட்டதாக கூறி போலி பத்திரம் ஒன்றை வைத்து கொண்டு நான் வசிக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி தினமும் உறவினர்களுடன் வந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News