உள்ளூர் செய்திகள்

வீரமாத்தி அம்மன் குதிரையில் ஊர்வலமாக வந்த காட்சி.

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தி அம்மன் திருக்கல்யாண விழாவையொட்டி குதிரையில் சாமி ஊர்வலம்

Published On 2022-07-13 08:41 GMT   |   Update On 2022-07-13 08:41 GMT
  • காலை சிலம்பாத்தாள் கல்யாண சிறப்பு பூஜைகளும் திருக்கல்யாண ஊர்வலமும் நடைபெற்றது.
  • குதிரை மீது வந்த அம்மனை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் பெரிச்சிபாளையம் வீரமாத்தி அம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று நடைபெற்றது.

இதில் இன்று காலை சிலம்பாத்தாள் கல்யாண சிறப்பு பூஜைகளும் திருக்கல்யாண ஊர்வலமும் நடைபெற்றது. சிலம்பாத்தாள் சாமி அலங்கரிக்க–ப்பட்டு குதிரை மீது சாமி ஊர்வலமாக வந்து தீக்குழி பாயும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கண–க்கானவர்கள் ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண கோலத்தில் குதிரை மீது வந்த அம்மனை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், பூ பிரசாதம் வழங்க–ப்பட்டது.

மதியம் அன்னதானம் நடைபெற்றது. இன்று மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடக்கிறது.

Tags:    

Similar News