உள்ளூர் செய்திகள்
இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்வு
- இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர்.
- பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர். பிரேமாபூட்டு சாவி சின்னத்திலும் , பரிமளா ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.
இதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பரிமளா 144 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.