உள்ளூர் செய்திகள்
குழந்தைக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது
- அஜித்குமாா் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்குமாரை கைது செய்தனா்.
காங்கயம் :
காங்கயம் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (வயது 24). கூலி வேலை செய்து வரும் இவா் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோா் புகாா் கொடுத்தனா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காங்கயம் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அஜித்குமாரை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா்.