உள்ளூர் செய்திகள்
- அவர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
- போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் பள்ளப்பட்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு பிரபு (வயது 28) என்ற வாலிபர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி செல்ல முயன்றனர்.இதைக் கண்ட பிரபு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 வாலிபர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நாமக்கல் மாவட்டம் பட்ட ணம் அருகில் உள்ள பர மேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் செல்வ ராஜ் (20) மற்றும் சிட்டிபாபு மகன் அர்ஜூன் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.