உள்ளூர் செய்திகள்

கோவில்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

Published On 2022-07-22 11:11 GMT   |   Update On 2022-07-22 11:11 GMT
  • கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் தங்க செயினை திருடி தப்பிச் சென்றனர்.
  • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையன்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). நகைக்கடை விற்பனை பிரதிநிதி.இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

எனவே அவர் சிவானந்தா மில்லில் உள்ள தனது தாய் வீடடில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வினோத்குமார் வீட்ைட பூட்டி விட்டு மனைவியின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் தங்க செயினை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News