உள்ளூர் செய்திகள்
- இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில்தான் செல்வாக்கு உள்ளது. கிராமங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
- கிராம மக்களும் கை கொடுத்தால் தான் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஊட்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில்தான் செல்வாக்கு உள்ளது. கிராமங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
எனவே கிராம மக்களும் கை கொடுத்தால் தான் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கிராமங்களை நோக்கி செல்ல கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கிராம மக்கள் மத்தியில் தனது திட்டங்களை விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் நினைக்கிறார்.
கமல் திட்டத்துக்கு கிராம மக்கள் கை கொடுப்பார்களா? என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும்.