உள்ளூர் செய்திகள்

ரேசன் கடை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2022-06-09 10:08 GMT   |   Update On 2022-06-09 10:08 GMT
  • தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7-ந் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9-ந் தேதி 3-வது நாளாக தொடர்கிறது.
  • ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு, ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அதாவது ரேசன் கடை பணியாளா்கள் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7-ந் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9-ந் தேதி 3-வது நாளாக தொடர்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கிடைக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News