உள்ளூர் செய்திகள்
- சேலம் கிச்சிப்பாளையத்தில் இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி தொழிலாளி இறந்து கிடந்தார்.
- மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50), தொழிலாளியான இவர் நேற்றிரவு குடி போதையில் வீட்டில் தூங்கினார்.
இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ேபாலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.