உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு

Published On 2022-07-31 09:01 GMT   |   Update On 2022-07-31 09:01 GMT
  • சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி. கணபதி நகர் பகுதியை சேந்தவர் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பாலியானர்.
  • இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி .கணபதி நகர் பகுதியை சேந்தவர் வேல்முருகன்.

இவருடைய மகன் சுதர்சன கிருஷ்ணன் (வயது 16). இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவர் மதியம் பள்ளியின் அருகில் உள்ள ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த கிணற்றில் இறங்கி குளித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுதர்சன கிருஷ்ணன் கிணற்றில் மூழ்கி பலியானான். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து மாணவன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News