உள்ளூர் செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே மணல் கடத்திய டிரைவர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்
- ஓட்டப்பிடாரம் பகுதியில் முறையான அனுமதி சீட்டு இன்றி எம்சாண்ட் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
- ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் ரோட்டில் முப்பிலிவெட்டி பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் பகுதியில் முறையான அனுமதி சீட்டு இன்றி எம்சாண்ட் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் ரோட்டில் முப்பிலிவெட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, முறையான அனுமதி சீட்டு இல்லாமல் மணல் கொண்டு சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதட்டப்பாறையை சேர்ந்த லாரி டிரைவர் அருண்பாலாஜி (வயது35) என்பவரை கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் எம்சாண்ட் மணலையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.