உள்ளூர் செய்திகள்

தரமற்ற பொருட்கள் விற்பனை; 79 பேருக்கு ரூ.5.31லட்சம் அபராதம்

Published On 2022-12-13 09:58 GMT   |   Update On 2022-12-13 09:58 GMT
  • கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
  • பொருட்களில் கலப்படமாக விற்றது தொடர்பாக கடந்த மாதத்தில் 79 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமை–யில் அதிகாரிகள் கடந்த மாதம் சேலம் மாநகர், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கலப்படம், உடலுக்கு கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவுப் பொருட்கள் விற்ப–னைக்கு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தரமற்ற உணவுப் பொருள், ஜவ்வரிசி, கலப்பட ஆயில், இதர பொருட்க–ளில் கலப்படமாக விற்றது தொடர்பாக கடந்த மாதத்தில் 79 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் விதிக்கப்–பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, சேலம் மாவட்டத்தில் யாரேனும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற ஆய்வுகள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News