சுந்தர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- ராமேசுவரம் அருகே சுந்தர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள சுந்தரமுடையான் கிராமத்தில் பழமையான சுந்தர மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்ட கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ராமேசுவரம் துர்க்கை அம்மன் கோவில் குருக்கள் சிவாச்சாரியார் தலைமையில் 4 கால யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை கோவில் விமானத்திற்கு மேளதாளத்துடன் எடுத்து சென்றனர். கோவில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு கூடிஇருந்த ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
பின்னர் 4 யாக கால பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.இதைதொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கிராமத் தலைவர் பாண்டி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மகேந்திரன் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.